Saturday, May 19, 2012

மௌனம்

மௌனம்
தன்னை மேலும் விரிவுபடுத்தி
வார்த்தையாகிறது

வார்த்தை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
கவிதையாகிறது

கவிதை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
பெண்மையாகிறது

பெண்மை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
தாய்மையாகிறது

தாய்மை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
தெய்வமாகிறது

தெய்வம்
தன்னை மேலும் விரிவுபடுத்தி
மௌனமாகிறது

Tuesday, May 15, 2012

நினைவுகள்

நாம் மீண்டும் அமர்ந்து  மூட்டிய
நெருப்பின் விருப்பத்தில்
உறைந்து கிடந்த நம் நினைவுகள்
உருகிப் பெற்றது உயிர்..!!